என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது
Byமாலை மலர்20 Oct 2020 7:30 AM GMT (Updated: 20 Oct 2020 7:30 AM GMT)
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சின்னப்பன் (வயது 65) என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து தாலுகா போலீசாரிடம் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் சின்னப்பனை கைது செய்தார். மேலும் எம்.ஜி.ஆர். நகரில் ஒரு வீட்டில் அவர் பதுக்கி வைத்திருந்த 5½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X