என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணா நதிநீரால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி
Byமாலை மலர்20 Oct 2020 7:20 AM GMT (Updated: 20 Oct 2020 7:20 AM GMT)
பூண்டி ஏரியில் இருந்து கிருஷ்ணா நதிநீர் வருகையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
பூந்தமல்லி:
குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கடந்த ஆண்டு வறண்டு கிடந்தது. கிருஷ்ணா நிதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஒரு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அங்கிருந்து தேவைப்படும்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மழை அதிகளவில் பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 16.31 அடியாக உள்ளது. 1,780 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து 480 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு தினந்தோறும் 59 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்பேட்டில் இருந்து மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு சென்று கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட்டுக்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும் முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதிநீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கடந்த ஆண்டு வறண்டு கிடந்தது. கிருஷ்ணா நிதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஒரு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அங்கிருந்து தேவைப்படும்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மழை அதிகளவில் பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 16.31 அடியாக உள்ளது. 1,780 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து 480 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு தினந்தோறும் 59 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்பேட்டில் இருந்து மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு சென்று கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட்டுக்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும் முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதிநீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X