search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

    பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு சங்குப்பேட்டை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சண்முகவேல்(வயது 38). பெயிண்டரான இவர் வெங்கடேசபுரம் தலையாட்டி சித்தர் ஆசிரமம் பகுதியை சேர்ந்த நந்தீஸ்வரன் என்பவரது வீட்டில் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சண்முகவேலுக்கு குணசெல்வி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    Next Story
    ×