search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராமேசுவரம் அருகே 300 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது

    ராமேசுவரம் அருகே 300 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதற்காக வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் ராமேசுவரம் தனிப்பிரிவு போலீசார் தனுஷ்கோடி செல்லும் சாலையில் வேர்க்கோடுபகுதியில் வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். 

    அப்போது அந்த வாகனத்தில் 9 பெட்டிகளில் இருந்த 301 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அதை கடத்தி வந்ததாக ராமேசுவரம் எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த மணிவேல் (வயது 35) என்பவரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×