என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் முதியவரிடம் செல்போன் பறித்தவர் கைது
Byமாலை மலர்19 Oct 2020 11:47 AM GMT (Updated: 19 Oct 2020 11:47 AM GMT)
கோவையில் முதியவரிடம் செல்போனை பறித்து சென்று தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கணபதி:
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் எபினேசர் (வயது 60). இவர் நேற்று முன்தினம் ரத்தினபுரி பகுதியில் நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தன்னிடம் செல்போன் இல்லாததால், தெரிந்த ஒருவருக்கு பேச செல்போன் கொடுத்து உதவ வேண்டும் என்று கனிவாக கேட்டுள்ளார்.
அதை நம்பிய எபினேசர், செல்போனை கொடுத்து உள்ளார். உடனே அந்த ஆசாமி செல்போனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எபினேசர் கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த சண்முகம் என்ற சங்கர் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X