என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
19 வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையன் மீண்டும் கைது
Byமாலை மலர்19 Oct 2020 11:24 AM GMT (Updated: 19 Oct 2020 11:24 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மணிகண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 19 வழக்குகளில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி வயலூர் ரோடு ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). நேற்று முன்தினம் இவர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது புத்தூர் மேல வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற முட்டை மணி (26) அங்கு வந்தார். செந்தில்குமார் கையில் வைத்திருந்த செல்போனை மணிகண்டன் பறித்துக்கொண்டு ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டனை விரட்டி பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், உறையூர் மற்றும் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மணிகண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 19 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் அவர் தண்டனை அடைந்து உள்ளதும், சில வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி வயலூர் ரோடு ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). நேற்று முன்தினம் இவர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது புத்தூர் மேல வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற முட்டை மணி (26) அங்கு வந்தார். செந்தில்குமார் கையில் வைத்திருந்த செல்போனை மணிகண்டன் பறித்துக்கொண்டு ஓடினார். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டனை விரட்டி பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் மீது ஏற்கனவே அரசு மருத்துவமனை போலீஸ் நிலையம், உறையூர் மற்றும் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மணிகண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 19 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் அவர் தண்டனை அடைந்து உள்ளதும், சில வழக்குகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X