search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தி.மு.க. பிரமுகர் பலி

    ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக பலியானார்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற அர்ச்சுனன் (வயது54). அகிலாண்டபுரம் தி.மு.க கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அகிலாண்டபுரத்தில் இருந்து குறுக்குச்சாலைக்கு சென்றுள்ளார்.

    அப்போது கக்கரம்பட்டி விலக்கு அருகே சென்ற போது குறுக்குச்சாலையில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×