search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

    கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தம்பாளையம்:

    கந்தம்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையத்தில் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சின்னம்மா (வயது 80). கூலி வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று தேவம்பாளையத்தில் இருந்து கருவேலமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு அங்குள்ள தார்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆனங்கூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பெரியசாமி மகன் குமார் (36) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.

    மோட்டார்சைக்கிளில் வந்த குமாரும் படுகாயம் அடைந்து திருச்செங்கோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×