search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி

    சாத்தான்குளம் அருகே 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அமராவதி குளத்தில் மாடுகள் மேய்வது வழக்கம். அதுபோல் நேற்று வழக்கம் போல மாடுகள் அங்கு மேய்ந்து விட்டு, குளத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தன. அப்போது மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. இதில் 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் மணி, வாசுகி, செல்வி ஆகியோர் போலீசில் புகார் செய்தனர். மேலும் சம்பவ இடத்தை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×