என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் வருவாய் இழப்பு: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்18 Oct 2020 11:52 AM GMT (Updated: 18 Oct 2020 11:52 AM GMT)
ஸ்ரீரங்கம் அருகே கொரோனா ஊரடங்கால் போதிய வருவாய் இன்றி தவித்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் அருகே கீழ அடையவளைஞ்சான் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவரது மனைவி ஹேமாவதி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணன், வாகனங்களில் மாற்று டிரைவராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் போதிய வருவாய் இன்றி சரவணன் சிரமப்பட்டு வந்தார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டையிட்டு கோபத்தில் 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஹேமாவதி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மனவேதனை அடைந்த சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X