search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    குடவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது44). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில்குமார் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். 

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து செந்தில்குமார் மனைவி உமா மகேஸ்வரி குடவாசல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×