என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்17 Oct 2020 2:08 PM GMT (Updated: 17 Oct 2020 2:08 PM GMT)
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள முனுசாமி நகர் மைதானத்தில் சிலர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மணிகண்டன் (வயது 23) மற்றும் தினேஷ்குமார் (24) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X