search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வாலாஜா அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

    வாலாஜா அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த கோவிந்தசேரிகுப்பம் கிராமம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். நாராயணகுப்பம் கிராமம் பஜனைகோவில் தெருவை சேர்ந்த தேவனின் மகள் ஷில்பா (வயது 19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் ஷில்பா நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஷில்பாவின் தாய் சரசு வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஷில்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஷில்பாவின் சாவுக்கான காரணம் குறித்து உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×