search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குளித்தலையில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    குளித்தலையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர் மாவட்டம் மேலபுவனகிரி ஒன்றியம் தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை திரும்ப பெற வேண்டும். ஊராட்சி பெண் தலைவர்களுக்கு பதிலாக அவரது கணவர் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை தடைசெய்யவேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, குளித்தலை ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×