என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி நகரசபை குப்பை கிடங்கில் திடீர் தீ
Byமாலை மலர்16 Oct 2020 2:51 PM GMT (Updated: 16 Oct 2020 2:51 PM GMT)
கோவில்பட்டி நகரசபை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தில், கோவில்பட்டி நகரசபைக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கோவில்பட்டி நகரில் சேரும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் தனியாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இங்கு நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்தது.
காற்று வேகமாக அடித்ததால் தீ மளமளவென்று பரவியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டு கோவில்பட்டி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராமன், சுகாதார அதிகாரி இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் தங்கள் வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X