என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடங்களுக்கு 395 பேர் விண்ணப்பம்
Byமாலை மலர்16 Oct 2020 9:54 AM GMT (Updated: 16 Oct 2020 9:54 AM GMT)
மன்னார்குடியில் 3 ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடத்திற்கு 395 பேர் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் காரிக்கோட்டை, 54 நெம்மேலி, வேட்டைதிடல் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று பெறப்பட்டது.
அதன்படி மன்னார்குடி அருகே காரிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணகி, ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சிமன்ற துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காரிக்கோட்டை ஊராட்சியில் 160 பேர், வேட்டை திடல் ஊராட்சியில் 165 பேர், 54 - நெம்மேலி ஊராட்சியில் 70 பேர் என மூன்று ஊராட்சிகளில் உள்ள 3 பணியிடங்களுக்கு மொத்தம் 395 பேர் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் காரிக்கோட்டை, 54 நெம்மேலி, வேட்டைதிடல் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று பெறப்பட்டது.
அதன்படி மன்னார்குடி அருகே காரிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணகி, ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சிமன்ற துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காரிக்கோட்டை ஊராட்சியில் 160 பேர், வேட்டை திடல் ஊராட்சியில் 165 பேர், 54 - நெம்மேலி ஊராட்சியில் 70 பேர் என மூன்று ஊராட்சிகளில் உள்ள 3 பணியிடங்களுக்கு மொத்தம் 395 பேர் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X