என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழில் அதிபரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 Oct 2020 7:39 AM GMT (Updated: 16 Oct 2020 7:39 AM GMT)
திருப்பூரில் தொழில் அதிபரிடம் ரூ.7 லட்சத்து 87 ஆயிரம் மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோடு பூச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 39). தொழில் அதிபரான இவர் கருவம்பாளையம் பகுதியில் பனியன் எலாஸ்டிக் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். செட்டிபாளையத்தை சேர்ந்த ஜெயராமன் அவரது மனைவி இந்துராணி மற்றும் சுமதி ஆகியோர் நவநீதகிருஷ்ணனின் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் தொழில் காரணமாக ஜெயராமன், இந்துராணி, சுமதி ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நவநீதகிருஷ்ணனிடம் ரூ.10 லட்சம் கடன் கேட்டுள்ளனர். கடன் தொகையை 6 மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய நவநீதகிருஷ்ணன் தனது மனைவியின் நகையை அனுப்பர்பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்தை ஜெயராமன், இந்துராணி, சுமதி ஆகியோர் வங்கி கணக்கில் செலுத்தினார். அதன் பிறகு அவர்கள் கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அங்கேரிபாளையத்தில் வைத்து ஜெயராமனிடம் நவநீத கிருஷ்ணன் தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அவர் பணத்தை கொடுக்க மறுத்து திட்டியதாக தெரிகிறது.
இது குறித்து நவநீதகிருஷ்ணன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஜெயராமன், அவரது மனைவி இந்துராணி மற்றும் சுமதி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X