search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    49வது ஆண்டு தொடக்க விழா- தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

    அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    நாளை அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

    * அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி.

    * பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்.

    *கட்சி தொண்டர்கள் 2021 சட்டசபை தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும்.

    * அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான சாதனையை படைப்போம்.

    * பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம். அதிமுக பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×