search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்சிஸ் சேவியர்
    X
    பிரான்சிஸ் சேவியர்

    வாலிபர் கொலை- தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

    வாலிபரை குத்திக்கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    ஆவடி பக்தவச்சலபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சேவியர் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான பிரான்சிஸ் சேவியர் (65) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பிரான்சிஸ் சேவியர் அடிக்கடி சேவியரை சந்தித்து தனது நிலம் சம்பந்தமாக அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மீண்டும் சேவியர், பிரான்சிஸ் சேவியர் இடையே இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

    சேவியரின் மகனான தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாலாஜி (17) இது குறித்து தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் சேவியர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை மார்பு மற்றும் உடலில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரான்சிஸ் சேவியரரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ராம்குமார் வாதாடினார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதி செல்வராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பிரான்சிஸ் சேவியருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆவடி போலீசார் பிரான்சிஸ் சேவியரை பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×