என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்16 Oct 2020 1:59 AM GMT (Updated: 16 Oct 2020 1:59 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த அப்துல் ரகுமான்கான் (வயது 36) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்துல் ரகுமான் கானை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவருடைய உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 416 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதே விமானம் வந்தபோது குடியுரிமை சோதனை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், விமான நிலையத்தில் கண்காணிப்பு கேமராவை சரிபார்க்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான சென்னையைச் சேர்ந்த அவினாஷ் (28) என தெரியவந்தது.
அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை, பேண்ட் பையில் தங்க தகடுகள் மற்றும் காயின்கள் இருந்தன. இது பற்றி விசாரித்தபோது துபாயில் இருந்து சென்னை வந்த முகமது கவுஸ் (26) என்பவர் இந்த தங்கத்தை தந்து விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் வந்து தருமாறு கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவினாஷ் மற்றும் விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் இருந்த முகமது கவுஸ் இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 348 கிராம் தங்கத்தை கைப்பற்றினார் கள்.
சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 764 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர் பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த அப்துல் ரகுமான்கான் (வயது 36) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அப்துல் ரகுமான் கானை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவருடைய உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 416 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதே விமானம் வந்தபோது குடியுரிமை சோதனை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், விமான நிலையத்தில் கண்காணிப்பு கேமராவை சரிபார்க்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான சென்னையைச் சேர்ந்த அவினாஷ் (28) என தெரியவந்தது.
அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை, பேண்ட் பையில் தங்க தகடுகள் மற்றும் காயின்கள் இருந்தன. இது பற்றி விசாரித்தபோது துபாயில் இருந்து சென்னை வந்த முகமது கவுஸ் (26) என்பவர் இந்த தங்கத்தை தந்து விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் வந்து தருமாறு கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவினாஷ் மற்றும் விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் இருந்த முகமது கவுஸ் இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 348 கிராம் தங்கத்தை கைப்பற்றினார் கள்.
சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 764 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர் பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X