என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 115 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்15 Oct 2020 5:59 PM GMT (Updated: 15 Oct 2020 5:59 PM GMT)
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 115 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,713 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 102 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 12,090 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 521 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 79 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,792 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களோடு சேர்த்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,137 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 9,753 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,375 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 99 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று 1,360 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானதில் 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,713 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 102 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 12,090 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 521 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 79 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,792 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களோடு சேர்த்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,137 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 9,753 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,375 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 99 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று 1,360 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானதில் 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X