search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மதுரை ஐகோர்ட் கேள்வி

    5 ஆண்டில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என அரசு தெரிவித்ததையடுத்து தற்போது நிலவரம் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
    மதுரை:

    அறந்தாங்கி- காரைக்குடி நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அருகே டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் கருப்பையா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் முத்தல்ராஜ், பழனியாண்டி வாதிட்டனர்.

    விசாரணையின் போது நீதிபதிகள், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2016 முதல் 2019 வரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?

    ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளால் எவ்வளவு வருமானம் வந்தது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×