என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல்
Byமாலை மலர்14 Oct 2020 7:13 AM GMT (Updated: 14 Oct 2020 8:16 AM GMT)
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
எடப்பாடி:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உடலுக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தவுசாயம்மாள் உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தவுசாயம்மாளின் 3-ம் நாள் ஈமக்கிரியை நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தவுசாயம்மாள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 5 நிமிடம் அங்கு அமர்ந்திருந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உடலுக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தவுசாயம்மாள் உடல் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தவுசாயம்மாளின் 3-ம் நாள் ஈமக்கிரியை நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தவுசாயம்மாள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வந்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 5 நிமிடம் அங்கு அமர்ந்திருந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X