என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாட்ஸ்-அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்12 Oct 2020 1:54 PM GMT (Updated: 12 Oct 2020 1:54 PM GMT)
நசரத்பேட்டை பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
நசரத்பேட்டை பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதுதொடர்பாக நசரத்பேட்டையை சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (வயது 21), ஹேமகுமர் (21), சரண்ராஜ் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பிரித்து வாட்ஸ்-அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X