search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொங்கலூர் அருகே மின்சாரம் தாக்கி குரங்கு உயிரிழப்பு

    பொங்கலூர் அருகே குரங்கு மின் கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உரசி சம்பவ இடத்திலேயே குரங்கு துடிதுடித்து இறந்து போனது.
    பொங்கலூர்:

    பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று சுற்றி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் இருந்த மின் கம்பத்தில் குரங்கு ஏறியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி குரங்கின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டது. 

    இதில் சம்பவ இடத்திலேயே குரங்கு துடிதுடித்து இறந்து போனது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் வந்து இறந்த அந்த குரங்கை எடுத்துச்சென்றனர்.

    Next Story
    ×