என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் பகுதியில் செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்
Byமாலை மலர்12 Oct 2020 9:48 AM GMT (Updated: 12 Oct 2020 9:48 AM GMT)
கூடலூர் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான மந்தைவாய்க்கால், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, காக்கானோடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் செவ்வந்தி பூக்களை அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் இதற்கான நடவுப்பணிகள் நடைபெற்றது.
இதற்கிடையே அவ்வப்போது பெய்த மழையால் செவ்வந்தி செடிகள் நன்கு வளர்ந்து, தற்போது அவற்றில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. அவ்வாறு பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்களை விவசாயிகள் பறித்து, கம்பம், மதுரை பூமார்க்கெட்டிற்கு கொண்டுபோய் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ செவ்வந்திப்பூ ரூ.100 முதல் ரூ.120 வரை என கொள்முதல் செய்கிறார்கள்.
இந்தநிலையில் தற்போது கூடலூர் பகுதியில் செவ்வந்தி பூக்கள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளதால் விரைவில் வரவுள்ள ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாக்காலத்தில் பூக்கள் விற்பனை மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஆயுதபூஜையின்போது செவ்வந்தி பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன்மூலம் தங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X