என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள், மினிலாரி பறிமுதல்
Byமாலை மலர்12 Oct 2020 1:20 AM GMT (Updated: 12 Oct 2020 1:20 AM GMT)
வேடசந்தூர் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள வே.புதுக்கோட்டை ஊராட்சி சிக்குபள்ளம்புதூரை சேர்ந்தவர் நூர்முகமது (வயது 40). இவர் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை மினி லாரியில் கொண்டு சென்று கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வே.புதுக்கோட்டையில் உள்ள தனது தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று இரவு வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது தோட்டத்தில் நின்ற மினிலாரியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X