என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டிவீரன்பட்டி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்11 Oct 2020 11:11 AM GMT (Updated: 11 Oct 2020 11:11 AM GMT)
பட்டிவீரன்பட்டி அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் நாசர் (வயது 60). விவசாயி. அவருடைய உறவினர் ஒருவர், விழுப்புரத்தில் கடந்த 6-ந்தேதி இறந்து போனார். இதனால் அன்றைய தினமே நாசர், தனது மனைவியுடன் துக்கம் விசாரிப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், நாசர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இந்தநிலையில் நாசர் நேற்று சித்தரேவுக்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X