என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு- ஒருவர் கைது
Byமாலை மலர்11 Oct 2020 10:41 AM GMT (Updated: 11 Oct 2020 10:41 AM GMT)
குடவாசலில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் குவளங்காட்டு தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் மோகன் (வயது23). சம்பவத்தன்று இவர் குடவாசல் பஸ் நிலையம் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடவாசலை சேர்ந்த மாணிக்கம் மகன் காளிதாஸ் (30) அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோகன், காளிதாசிடம் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து காளிதாஸ் குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் உடனடியாக பஸ் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் மோகனை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மோகனை கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X