என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்11 Oct 2020 9:00 AM GMT (Updated: 11 Oct 2020 9:00 AM GMT)
திருவாரூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வேலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது விவசாய பணிகளை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புற பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக வேலங்குடியில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு தற்காலிகமாக கூட்டுறவு நகரில் வசித்து வருகிறார். கட்டுமான வேலை நடப்பதால் அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் அருகே வேலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது விவசாய பணிகளை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புற பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக வேலங்குடியில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு தற்காலிகமாக கூட்டுறவு நகரில் வசித்து வருகிறார். கட்டுமான வேலை நடப்பதால் அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X