search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சை அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தஞ்சாவூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவ.முருகேசன் தலைமை தாங்கினார்.

    மாநில மகளிரணி அமைப்பாளர் அமுதா புஷ்பா, சட்ட ஆலோசகர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தலித் பெண் கொலைக்கு நீதி வேண்டும். கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும். தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    Next Story
    ×