என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்10 Oct 2020 8:23 AM GMT (Updated: 10 Oct 2020 8:23 AM GMT)
திருவெறும்பூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததை கண்டித்து அந்த மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜன், மல்லிகா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மீண்டும் உயிர் பலி ஏற்படுவது தடுத்திடும் வகையில் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபோல் உப்பிலியபுரம் வைரிசெட்டிபாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X