search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    திருவெறும்பூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்ததை கண்டித்து அந்த மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜன், மல்லிகா, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

    மீண்டும் உயிர் பலி ஏற்படுவது தடுத்திடும் வகையில் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபோல் உப்பிலியபுரம் வைரிசெட்டிபாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×