search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பழனியில், வருமானம் இல்லாததால் தூக்குப்போட்டு இசைக்கலைஞர் தற்கொலை

    கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வந்த இசைக்கலைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பழனி:

    பழனி ராமநாத நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 63). தவில் இசைக்கலைஞர். கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி அவர் தவித்து வந்தார். இதனால் வறுமையின் காரணமாக வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாத நகர் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இறந்த மாரிமுத்து கட்டைக்காலில் நின்று தவில் வாசிப்பதில் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×