என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில், வருமானம் இல்லாததால் தூக்குப்போட்டு இசைக்கலைஞர் தற்கொலை
Byமாலை மலர்10 Oct 2020 7:13 AM GMT (Updated: 10 Oct 2020 7:13 AM GMT)
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வந்த இசைக்கலைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழனி:
பழனி ராமநாத நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 63). தவில் இசைக்கலைஞர். கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி அவர் தவித்து வந்தார். இதனால் வறுமையின் காரணமாக வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாத நகர் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மாரிமுத்து கட்டைக்காலில் நின்று தவில் வாசிப்பதில் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X