search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இளம்பிள்ளை அருகே மது விற்ற 3 பேர் கைது

    இளம்பிள்ளை அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளம்பிள்ளை:

    இளம்பிள்ளை அருகே கே.கே. நகர், சுண்டமேட்டூர், தப்பக்குட்டை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பார்வதி (வயது 60), சுண்டமேட்டூர் வெங்கடாஜலம் (42), தப்பகுட்டை ராஜேந்தர் (53), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×