என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்9 Oct 2020 10:50 AM GMT (Updated: 9 Oct 2020 10:50 AM GMT)
ஆவடி அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் டில்லி (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர் ஞானசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை திருநின்றவூர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது டில்லி மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லி மேம்பாலத்தின் ஓரம் நடந்து சென்றார். இதில் அவர் திடீரென மேம்பாலத்தின் மேல் இருந்து தவறி 25 அடி ஆழத்தில் கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி டில்லி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X