search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    வையப்பமலை அருகே பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

    வையப்பமலை அருகே மொபட்டில் சென்று கொண்டு இருந்த பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியரிடம் மர்மநபர் 2 பவுன் நகையை பறித்து சென்றார்.
    எலச்சிப்பாளையம்:

    திருச்செங்கோடு அருகே உள்ள மரப்பரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகுணா (வயது 37). இவர் மல்லசமுத்திரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தகவல் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இவர் பணியை முடித்து விட்டு வையப்பமலையில் இருந்து மரப்பரை நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எலச்சிப்பாளையம் அருகே எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், சுகுணாவை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

    இதுகுறித்து சுகுணா கொடுத்த புகாரின் பேரில் எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    Next Story
    ×