என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Byமாலை மலர்8 Oct 2020 1:40 PM GMT (Updated: 8 Oct 2020 1:40 PM GMT)
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீனிவாச நகரில் குடியிருப்பு மற்றும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்தது.
அதனை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய காரணத்தாலும், இனாம்மணியாச்சி பஞ்சாயத்து நிர்வாகம் தீர்மானத்தின் மூலம் செல்போன் கோபுரம் அமைக்க தடை செய்ததாலும் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் மீண்டும் பணிகளை தொடங்க இருப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு, மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் சீனிவாசன் நகர் செல்போன் கோபுரம் எதிர்ப்பு குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீனிவாச நகர் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
அதனை தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலக உதவியாளர் நிஷாந்தினியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X