என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி
Byமாலை மலர்8 Oct 2020 11:09 AM GMT (Updated: 8 Oct 2020 11:09 AM GMT)
சங்கரன்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 36). கூலி தொழிலாளியான இவர், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனது அக்காள் கனி செல்வியின் வீட்டில் வசித்து வந்தார். பின்னர் பிரபாகர் தனது மனைவியின் பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு சென்றார்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று இரவில் அந்த வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நேற்று முன்தினம் பிரபாகர் தனது அக்காளின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X