search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    துறையூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    துறையூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    துறையூர்:

    துறையூர்-பெரம்பலூர் பைபாஸ் சாலை அருகே அருணா அவென்யூ விரிவாக்கப் பகுதி உள்ளது. இதில், துறையூரைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 35) என்பவர், மனைவி கார்த்திகா (28) மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அசோக்குமார் மாலத்தீவில் சொந்தமாக உணவகம் நடத்தி வருவதால் அங்கு சென்று விட்டார். இதனால், கார்த்திகா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று காலை கீரம்பூரில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு மாலை 4 மணியளவில் கார்த்திகா வீடு திரும்பினார். அப்போது கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும், அருகில் உள்ள மலையப்பன் சாலை அருகே உள்ள வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் மர்ம ஆசாமிகள் எடுத்து சென்றிருந்தனர். இந்த துணிகர திருட்டு குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் கார்த்திகா கொடுத்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டுகளில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், புறவழிச்சாலை, அம்மாபட்டி சாலை, கண்ணபிரான் காலனி ஆகிய பகுதிகள் மதுப் பிரியர்களின் கூடாரமாகவும், போதை பொருட்கள் விற்கும் இடமாகவும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×