என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசல் அருகே மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
Byமாலை மலர்6 Oct 2020 11:48 AM GMT (Updated: 6 Oct 2020 11:48 AM GMT)
குடவாசல் அருகே மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்டின்(வயது50). இவரது மனைவி லைசாமேரி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது கோபித்து கொண்டு லைசாமேரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தகவல் அறிந்ததும் ஊரில் உள்ளவர்கள் சமாதானம் பேசி அவரை பாஸ்டின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் கணவன்-மனைவி குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பாஸ்டின் இரவு சாப்பாடு கேட்டு உள்ளார். அப்போது லைசாமேரி, அவரது தாய் சலத்மேரி ஆகியோர் சேர்ந்து பாஸ்டினிடம் சண்டை போட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த பாஸ்டின் இரும்பு கம்பியால் மனைவி, மாமியார் ஆகியோரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து லைசாமேரி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாஸ்டினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X