என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடியில் இதுவரை ரூ. 4 கோடி மீட்பு
Byமாலை மலர்6 Oct 2020 6:17 AM GMT (Updated: 6 Oct 2020 6:17 AM GMT)
சேலம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் அல்லாதவர்களை போலியாக சேர்த்து ரூ. 6 கோடி வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தற்போது வரை ரூ. 4 கோடி மீட்கப்பட்டுள்ளது.
சேலம்:
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் அல்லாதவர்களை போலியாக சேர்த்து ரூ. 6 கோடி வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தற்போது வரை ரூ. 4 கோடி மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 5 வேளாண் அதிகாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளி மாநிலத்தை சேர்ந்த 1264 கணக்குகளில் இருந்து 25 லட்சம் ரூபாயை விரைவில் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X