என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை வீச்சு- பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
Byமாலை மலர்6 Oct 2020 3:15 AM GMT (Updated: 6 Oct 2020 3:15 AM GMT)
பொதட்டூர்பேட்டை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று முட்புதரில் வீசப்பட்டு கேட்பாரற்று கிடந்தது. குழந்தையை மீட்டு பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல்பொதட்டூர்பேட்டையில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும்
வழியில் உள்ள முட்புதரின் வெளிப்புறத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, அங்கே பிறந்து சிலமணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட பொதுமக்கள் பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சையின் மூலம் தொப்புள்கொடி அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் ஈவு இரக்கமில்லாமல் முட்புதரில் வீசி சென்ற பெண் யார்? எதற்காக குழந்தையை முட்புதர் அருகே வீசிச்சென்றார்? பிறந்தது பெண் குழந்தை என்பதால் புதரில் வீசப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல்பொதட்டூர்பேட்டையில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும்
வழியில் உள்ள முட்புதரின் வெளிப்புறத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, அங்கே பிறந்து சிலமணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட பொதுமக்கள் பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சையின் மூலம் தொப்புள்கொடி அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் ஈவு இரக்கமில்லாமல் முட்புதரில் வீசி சென்ற பெண் யார்? எதற்காக குழந்தையை முட்புதர் அருகே வீசிச்சென்றார்? பிறந்தது பெண் குழந்தை என்பதால் புதரில் வீசப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X