search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று- 62 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 572 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×