search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசி கலெக்டர்
    X
    தென்காசி கலெக்டர்

    கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் இந்த பிரிவினருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை, அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களுக்கு நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

    சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் 15-ந்தேதிக்கு முன்பும், டிசம்பர் 16-ந் தேதியில் தொடங்கும் புதிய உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

    Next Story
    ×