என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் கிணற்றில் வாலிபர் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
Byமாலை மலர்5 Oct 2020 11:10 AM GMT (Updated: 5 Oct 2020 11:10 AM GMT)
சேலத்தில் கிணற்றில் வாலிபர் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் கிணற்றில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பகுதியில் பெரிய புதூர் விவேகானந்தர் தெருவில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் சுமார் 30 வயதுடைய வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை கயிறு மூலம் மீட்டனர்.
இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. பின்னர் வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாலிபர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது அந்த வழியாக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் வாலிபர் பிணம் மிதந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X