search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மதுரையில் 85 பேருக்கு கொரோனா

    மதுரையில் நேற்று புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது.
    மதுரை:

    மதுரையில் நேற்று புதிதாக 85 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 57 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்த நிலையில் மதுரையில் நேற்று 89 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 75 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 766 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 673 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.
    Next Story
    ×