என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூரமங்கலத்தில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
Byமாலை மலர்4 Oct 2020 10:23 AM GMT (Updated: 4 Oct 2020 10:23 AM GMT)
சேலம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
சேலம்:
தேக்கம்பட்டி அருகே உள்ள தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூங்கான். இவருடைய மகன் கார்த்திக் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லலிதா (21). இவர் பி.எஸ்சி., முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், லலிதாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி கார்த்திக்-லலிதா வீட்டை விட்டு வெளியேறி, கன்னியாகுமரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நேற்று சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசார் இருவரின் பெற்றோரை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X