search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி- மருத்துவர் கே.வி. திருவேங்கடம்
    X
    முதல்வர் பழனிசாமி- மருத்துவர் கே.வி. திருவேங்கடம்

    மருத்துவர் கே.வி. திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

    சென்னையில் பிரபல மருத்துவர் கே.வி. திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் வசித்து வந்த டாக்டர் கே.வி.திருவேங்கடமும், அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவரது மனைவி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் கே.வி.திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார்.

    மறைந்த டாக்டர் கே.வி.திருவேங்கடத்துக்கு, அவர் இயக்குனராக பணியாற்றிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஹரிஹரன் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என பலர் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் மருத்துவர் கே.வி. திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    சென்னை தியாகராயநகரில் வசித்து வந்த டாக்டர் கே.வி.திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார். மருத்துவர் திருவேங்கடம் தனது கடின உழைப்பு திறமையால் மருத்துவத்துறையில் தனி முத்திரை பதித்தவர். மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.
    Next Story
    ×