search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தர்மபுரியில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முரளி, சத்திரியன், முருகன், ஆறுமுகம், வினோத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மின்வாரியத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. உத்தரபிரதேச மாநிலத்தில் மின்வாரிய தனியார்மயத்தை எதிர்த்து நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×