search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    ஓ.பன்னீர்செல்வம் தேனி சென்றார்

    சென்னையில் நேற்று நடந்த காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், நேற்று மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டு சென்றார்.
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற பிரச்சினை அக்கட்சிக்குள் பூதகரமாக எழுந்துள்ள நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

    இதற்கிடையே நேற்று காலையில் ஓ.பன்னீர்செல்வத்தை, மூத்த தலைவர் தம்பிதுரை சந்தித்து பேசினார். அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து சென்னையில் நேற்று நடந்த காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தின நிகழ்வுகளில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அதன்பின்னர் நேற்று மதியம் 3 மணிக்கு அவர் சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டு சென்றார்.

    தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×